மஞ்சள் நீராட்டு விழாவில் எம்எல்ஏ பங்கேற்பு

குரும்பலூர் மற்றும் அரும்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன் மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

Update: 2024-04-29 11:47 GMT

குரும்பலூர் மற்றும் அரும்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன் மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டு வாழ்த்து. பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் மற்றும் அரும்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலராக உள்ள தியாகராஜன் மகள் ரூபஸ்ரீயின் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி பாண்டிச்சேரி அன்னை லூர்து மகாலில் நடைபெற்றது.

இதில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் நேரில் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது அரும்பாவூர் மற்றும் குரும்பலூர் பேரூராட்சியின் திமுக நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள், மற்றும் லப்பைகுடி காடு, பூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர்கள் பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News