பூவிருந்தவல்லியில் குடியரசு தினத்தில் பரிசுகளை வழங்கிய எம்எல்ஏ
75வது குடியரசு நாளில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய கொடி ஏற்று மாணவர்களுக்கு பரிசுகளை எம்எல்ஏ வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-26 16:52 GMT
குடியரசு தின அணிவகுப்பு
75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி பள்ளி மாணவர்களுடைய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து பள்ளியில் நடத்தி முடிக்கப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி பரிசுகளை வழங்கினார். இதில் நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.