உருவ பொம்மை எரிப்பின்போது எம்எல்ஏ சேலையில் பற்றி எறிந்த தீ

குஷ்புவின் உருவ பொம்மையை எரிக்கும் போது எம்எல்ஏவின் சேலை தீ பிடித்து எறிந்ததால் பரபரப்பு

Update: 2024-03-13 16:49 GMT

சேலையில் பற்றி எறிந்த தீ

தமிழ்நாடு அரசு சுமார் 1.15 கோடி மகளிர்களுக்கு மகளிர் உரிமைத்திட்டமாக மாதம் ரூ 1000 வழங்கி வரும் நிலையில் இந்த திட்டத்தில் பயன் பெறும் இல்லதரசி மகளிர்களை இழிவுவாக பேசிய பாஜகவின் நிர்வாகியும், நடிகையுமான குஷ்புவை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமை தாங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி கலந்துகொண்டு நடிகை குஷ்புக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி குஷ்புவின் உருவ பொம்மையை எரிக்க முயற்சித்த போது சிவகங்கை நகர் காவல் துறையினர் மகளிர் அணி நிர்வாகிகளிடம் இருந்து உருவப் பொம்மையை மீட்டு அப்புறப்படுத்தினர்.‌ அப்போது குஷ்புவின் புகைப்படத்தை எரிக்க முயற்சித்த நிர்வாகி ஒருவர் அந்த புகைப்படத்தின் மீது தின்னரை ஊற்றினார். அப்போது அருகில் இருந்த மானாமதுரை எம்எல்ஏ தமிழரசியின் சேலையில் தீ பற்றியது. அருகிலிருந்த திமுக மகளிர் அணி நிர்வாகிகள் சேலையில் இருந்த தீயை உடனடியாக அணைத்தனர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Tags:    

Similar News