பா.ஜ.கவில் புதிதாக இணைந்தவர்களுக்கு MLA வரவேற்பு

பா.ஜ.கவில் புதிதாக இணைந்த 100 க்கும் மேற்பட்டவர்களை சால்வை அணிவித்து MLA சரஸ்வதி வரவேற்றார்.

Update: 2024-03-14 01:52 GMT

பா.ஜ.கவில் புதிதாக இணைந்த 100 க்கும் மேற்பட்டவர்களை சால்வை அணிவித்து  MLA சரஸ்வதி வரவேற்றார்.


ஈரோடு சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனி அருகே பாஜக சூரம்பட்டி கிழக்கு மண்டல சார்பில் சக்திகேந்தர அலுவலகத்தை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி , ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் . தொடர்ந்து பாஜகவில் புதியதாக இணைந்த 100 க்கும் ஆண்கள் , பெண்களுக்கு MLA சரஸ்வதி , தெற்கு மாவட்டத்தலைவர் வேதானந்தம் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர் . பாஜகவில் சேர்ந்தவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகும் , மீண்டும் மோடில தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என்றும் , அதற்கு பா.ஜ.க தொண்டார்கள் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளர் பிரபு சங்கர் , மண்டல தலைவர் நிர்மல் குமார் , செய்தி தொடர்பாளர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு புதியதாக பா.ஜ.கவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News