நாமக்கல்லில் தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பில் மாதிரி ஒத்திகை

நாமக்கல்லில் தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பில் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-05-30 10:47 GMT

ஒத்திகையில் ஈடுபட்ட மீட்பு படையினர்

நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம் CMS கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ச.உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4-வது பட்டாலியன் தேசிய பேரிடர் மீட்புப்படை உதவி தலைவர் ஸ்ரீதர் தலைமையில் டீம் கமாண்டர்,

பாதுகாப்பு அலுவலர், மதிப்பீடு அணியினர், தேடுதல் மற்றும் வெட்டுதல் அணியினர், மருத்துவ அணியினர், தகவல் தொடர்பு அலுவலர்கள், கயிறு மூலம் மீட்புப் பணி அணியினர் என 30-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் மாதிரி ஒத்திகை நடைபெற்றது.

இந்த ஒத்திகை பயிற்சியின்போது, கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் பாதிக்கப்பட்ட நபரை கேமரா மூலம் கண்டறிவது, சுவற்றில் சுழலும் மீட்பு கருவிகள், துளையிட்டு மீட்கும் பணிகள், உயரமான கட்டிடத்தில் சிக்கிய நபரை கயிறு மற்றும் ஸ்டெச்சர் மூலம் மீட்கும் பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகள் நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது. 

 மேலும் மீட்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி அளிப்பது, தொடர் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் பேரிடர் காலத்தில்,

மீட்புப் பணிகளுக்கு உபயோகப்படுத்தும் நவீன உபகரணங்கள் மாணவ, மாணவியர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, உபகரணங்கள் பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன்,

வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர்.பார்தீபன் (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News