மோடி பதவியேற்பு: பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி பாஜகவினர் கொண்டாட்டம்

பாரதப் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்கும் நிகழ்வை கொண்டாடும் விதமாக நாமக்கல் மாவட்ட பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி,பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்

Update: 2024-06-10 02:03 GMT

 18 வது மக்களவைக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நிறைவு பெற்று,வாக்குப்பதிவு எண்ணிக்கை இந்தியா முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வுக்காக நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், நிதீஷ் குமார் அணி ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில் அனைவரும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்க ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது முறையாக பாரதப் பிரதமராக மோடி பதவியேற்பு விழா குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அதனை கொண்டாடும் விதமாக நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக மற்றும் நாமக்கல் நகர பாஜகவினர் நாமக்கல் பஸ்நிலையம் அருகிலுள்ள மணிக்கூண்டு அருகே மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில், நகர தலைவர் சரவணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பாஜகவிற்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மனோகர், மாநில நிர்வாகிகள் லோகேந்திரன், ராதிகா மற்றும் நகர மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News