உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் !
ஊத்தங்கரை அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
Update: 2024-03-28 05:17 GMT
ஓலைப்பட்டி பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஓலைப்பட்டி பகுதியில் பறக்கும் படை அலுவலர் மணிகண்டன் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது வழியாக வந்த பல்வேறு வாகனங்களை சோதனை செய்து வந்த நிலையில் வழியாக வந்த பிக்கப் வேன் ஒன்றை சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி தேர்தல் விதி மீறி வைத்திருந்த 67,460 பணத்தை பறிமுதல் செய்து ஊத்தங்கரை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் குமார் மற்றும் ஊத்தங்கரை தாசில்தார் திருமால் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள்கையில் தர்மபுரி மாவட்டம் குப்பங்கரை கொண்டப்ப நாயக்கன் அல்லி பெரியசாமி 36 தர்மபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்த சங்கீத்குமார் 31 ஆகியோர் சிம் கார்டு விற்பனை ஏஜென்சி நடத்தி வந்ததாகவும் சிம்கார்டு விற்பனை செய்த பணத்தை கொண்டு சென்றதாகவும் உரிய ஆவணம் கையில் இல்லாத காரணத்தினால் அவரது பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் தேர்தல் வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.