அருப்புக்கோட்டையில் ம பாஜக பிரமுகர் வீட்டில் பணம் கொள்ளை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முன்னாள் கிராம நிர்வாக அலுவலரும் பாஜக பிரமுகருமான பிரித்திவிராஜ் வீட்டில் 2,60,000 பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-02-22 16:20 GMT
கேமராவில் பதிவான மர்மநபர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரிதிவிராஜ். கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த பிரிதிவிராஜ் சமீபத்தில் தனது கிராம நிர்வாக அலுவலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார்.

இதனை அடுத்து தற்போது பாஜக சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவராக பிரிதிவிராஜ் இருந்து வருகிறார். இந்நிலையில் பிரிதிவிராஜ் நேற்று இரவு 6.30 மணி அளவில் தனது குடும்பத்துடன் வீட்டை போட்டுவிட்டு பந்தல்குடியில் தனது உறவினர் இல்ல நிச்சயதார்த்த வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் இரவு 10.30 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த நாய் குலைத்துக் கொண்டே இருந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்து யாரோ தப்பி ஓடுவது போல் இருந்துள்ளது உடனடியாக வீட்டை திறந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ 2,60,000 பணம் திருடு போனது கண்டு  பிரிதிவிராஜ் அதிர்ச்சி அடைந்தார்.


. இது குறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது முக கவசம் அணிந்த நபர் ஒருவர் வீட்டின் பின்னால் இருந்த சுவர் வழியாக ஏறி குதித்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது மேலும் அவர் சிசிடிவி கேமராவை துணியை வைத்து மூடுவது போலும் அதில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தடயங்களை சேகரித்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்

Tags:    

Similar News