வடக்கு மாதவி ஏரிக்கரையில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

வடக்கு மாதவி ஏரிக்கரை காட்டுக் கொட்டகை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-02-15 09:11 GMT

காவல் நிலையம் 

பெரம்பலூர் வடக்கு மதிய சாலையில் உள்ள ஏரிக்கரை, காட்டு கொட்டகை பகுதி சேர்ந்தவர் நாராயணசாமி மகன் நல்லுசாமி 45. இவர் பெரம்பலூர் நகராட்சியில் டெம்ரவரியாக வாட்டர் லைன்மேனாக வேலை செய்து வருகிறார். மனைவி ஜெயக்கொடி கட்டிட வேலைக்காக சென்று விட்டார் மகன்கள் இருவரும் பிப்ரவரி 14ம் தேதி காலையில் 9:30மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர்.

மீண்டும் மதியம் 12:40 மணியளவில் வந்து பார்க்கையில் வீட்டின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ரூபாய் 10, ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது, இதில் நல்லசாமி மகன் வசந்த் என்பவரின் கல்வி சான்றுகள் காணமல் போய் உள்ளது. இது குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் கருணாகரன் உதவி ஆய்வாளர் ரகுபதி ஆகியோர் , ஆய்வு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து திருடு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News