ரெட்டிபட்டி 10க்கும் மேற்பட்டோரை தேன் பூச்சி கொட்டியதால் பரபரப்பு

தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்த 10 க்கும் மேற்பட்டோரை தேன் பூச்சி கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-06-08 15:20 GMT

சிகிச்சை பெற்று வரும் பெண் தொழிலாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ரெட்டிபட்டி ஊராட்சி அண்ணா நகர் காலனி அருகே சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று வேலை செய்தனர், அப்பொழுது அங்கிருந்து புதர் செடியில் இருந்த தேன் பூச்சிகள் கொட்டியதில்,

சுமதி, லட்சுமி, அம்பிகா, சுமதி, வாடாமல்லி உட்பட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பூச்சிக் கொட்டியதில் 10ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,

தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் ஈடுபட்டபெண்கள் மீது தேன் பூச்சி கொட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

Tags:    

Similar News