திருப்பத்தூர் நகர் பகுதியில் நூருக்கும் மேற்ப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றம்!

திருப்பத்தூர் நகர் பகுதியில் நூருக்கும் மேற்ப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றம், அப்போது இனிப்பு கடையை சேதப்படுத்தியது காண்போர் நெஞ்சை பதரவைத்தது.

Update: 2024-07-11 07:16 GMT

ஆக்கிரமிப்பு  அகற்றம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் நூருக்கும் மேற்ப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றம், அப்போது இனிப்பு கடையை சேதப்படுத்தியது காண்போர் நெஞ்சை பதரவைத்தது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலைய ராஜிவ் காந்தி சிலை அருகில் நூறுக்கும் மேற்ப்பட்ட கடைகள் பூக்கடை இனிப்பு கடை உணவு விடுதி குளிர் பானகடை உள்ளிட்டவைகளை நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூர் காரணமாக கடைகளை அகற்ற கடந்த 15 நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இன்று ஜேசிபி இயந்தம் மூலம் காவல் துறையின் பாதுகாப்பில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது அப்போது இரு இனிப்பு கடையின் இனிப்பு கண்ணாடி பெட்டகங்களை ஈவு இரக்கம் இல்லாமல் சேதப்படுத்தும் போது பார்ப்போர் நெஞ்சை பதரவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News