போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியைகள் கைது!!

போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியைகள் கைது!!

Update: 2024-07-04 08:53 GMT
புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும் மற்றும் பதவி உயர்வு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கு முடியும் வரை பணிமாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி கலந்தாய்வு நடைபெறும் புதுக்கோட்டை மார்த்தாண்டபுரத்தில் உள்ள புனித அடைக்கல அன்னை பள்ளியில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கலந்தாய்வு வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு பட்டனர் பின்னர் காவல் துறையினர் கைது செய்து ஆசிரியர்களை அழைத்துச் சென்றனர். முன்னதாக இதுகுறித்து பேசிய தமிழ்நாடு ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் சண்முகநாதன் உடனடியாக தமிழக அரசு எங்களது கோரிக்கையை ஏற்க வேண்டும் ஏற்கனவே எங்களுக்கு வரவேண்டிய பண பயன்களை தருகிறோம் என தேர்தல் வாக்குறுதியில் அளித்தனர் ஆனால் அதனை நிறைவேற்றவில்லை நாங்கள் ஒவ்வொரு தடவையும் அவரிடம் பல்வேறு வகையான கோரிக்கையை வைத்துள்ளோம் ஆகவே எங்களுக்கு உடனடியாக இந்த கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
Tags:    

Similar News