ஆர்டிஎம் கல்லூரியில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம்

ஆர்டிஎம் கல்லூரியில் 908 இடங்களுக்கு 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

Update: 2024-06-14 05:19 GMT

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலைக் கல்லூரியில் 908 மாணவ, மாணவியருக்கான இடங்களுக்கு 19264 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டது. ஒற்றை சாளர முறையில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள 6053 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு வரலாறு, பொருளியல், வணிகவியல் கணிதம் இயற்பியல் வேதியல் விலங்கியல் தாவரவியல் கணினி அறிவியல் உள்ளிட்ட 10 துறைகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதில் தமிழை விருப்பப்படமாக எடுப்பதற்காக 2783 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களிடையே கலை.அறிவியல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி படித்து வரும் நிலையில் இந்த ஆண்டும் அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் தமிழ் விருப்பப்படமாக அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News