இரண்டு குழந்தைகளுடன் தாய் மாயம் காவல்துறையினர் விசாரணை

பொம்மிடி அருகே உள்ள பொ.நடுர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி இரண்டு குழந்தைகளுடன் மாயம் காவல்துறையினர் விசாரணை

Update: 2024-03-20 05:48 GMT

இரண்டு குழந்தைகளுடன் தாய் மாயம் 

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொம்மிடி அருகே உள்ள பொ.நடுர் பகுதியை சேர்ந்தவர் கோபி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் நத்தமேட்டில் வசித்து வந்தனர். குழந்தைகள் 2 பேரும் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர். நேற்று காலை குழந்தைகளை பள்ளியில் விடுவதற்கு புவனேஸ்வரி சென்றார். ஆனால் அவர் 2 குழந்தைகளுடன் மாயமானார். குடும்பத்தினர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புவனேஸ்வரி யின் தாயார் கலைவாணி பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பொம்மிடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News