குப்பையை தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

தட்டான்குளத்தில் குப்பையை தீ வைத்து எரிப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகதிற்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2024-01-01 01:27 GMT

குப்பையை தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தட்டான்குளம் பகுதியில் நான்கு வழிச்சாலையில் உள்ள பாலத்துக்கு அடியில் குப்பை கொட்டப்பட்டு வருகின்றது. இந்த குப்பையை அடிக்கடி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. இதை தடுக்க உள்ளாட்சி அமைப்பினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News