குறுகிய சாலையில் நிற்கும் சரக்கு லாரிகள் - வாகன ஓட்டிகள் அவதி

குமாரபாளையத்தில் பகலில் சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கு  இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.  

Update: 2023-11-29 03:09 GMT

குறுகிய சாலையில் வரும் சரக்கு லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலை, இடைப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் ஏராளமான வியாபார  நிறுவனங்கள் உள்ளன. இவைகளில் சரக்குகளை இறக்க ஆங்காங்கே லாரிகள், டெம்போக்கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் பகல் நேரத்தில் சாலையின் குறுக்கே, வாகனங்களை நிறுத்தி சரக்குகளை இறக்குகின்றனர். இதனால் குறுகிய சாலைகளில் வரும் பஸ், லாரிகள், கார்கள்  உள்ளிட்ட இதர வாகனங்கள் செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது. சரக்குகள் இறக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News