தாயார் இறந்த துக்கத்தில், மது போதைக்கு அடிமையானவர் உயிரிழப்பு

விசுவநாதபுரியை சேர்ந்த சந்திரசேகர் தன் தாய் இறந்த துக்கத்தால் கடந்த ஒரு வருடமாக மதுவுக்கு அடிமையானவர், இரண்டு நாட்களுக்கு முன் வீட்டருகே சடலமாக மீட்கப்பட்டார்.

Update: 2024-01-16 12:03 GMT

 கரூர் மாவட்டம், க. பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட விசுவநாதபுரி, எம் ஜி ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் வயது 35. இவரது மனைவி கவிதா வயது 34. சந்திரசேகரின் தாயார் கடந்தாண்டு உயிரிழந்தார். இதனால், மன வேதனை அடைந்த சந்திரசேகர் தொடர்ந்து மது குடித்து வந்தார். இந்நிலையில், ஜனவரி 14ஆம் தேதி மாலை 4 மணியளவில், சந்திரசேகர் அவரது வீட்டின் அருகே மது போதையில் இறந்து கிடந்தார்.

இதனால், அவரது மனைவி கவிதா க.பரமத்தி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சந்திரசேகரின் உடலை உடற் கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் க. பரமத்தி காவல்துறையினர்.

Tags:    

Similar News