சிகிச்சை பலனின்றி எம்.பி.கணேசமூர்த்தி உயிரிழப்பு !
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த எம்பி கணேச மூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-28 04:44 GMT
எம்.பி.கணேசமூர்த்தி
கோவை:தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த எம்பி கணேச மூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரோடு எம்பி கணேசமூர்த்தி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் உடலை ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் முறையாக முடிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடல் உறவினர்களிடம் முறையாக ஒப்படைக்கப்பட உள்ளது.