புதிய பயணியர் நிழல் குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா- எம்பி ஜோதிமணி துவக்கி வைத்தார்.

புதிய பயணியர் நிழல் குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா- கரூர் எம்பி ஜோதிமணி துவக்கி வைத்தார்.

Update: 2023-12-02 08:13 GMT

புதிய பயணியர் நிழல் குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதிய பயணியர் நிழல் குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா எம்பி ஜோதிமணி துவக்கி வைத்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்குட்பட்ட, சேங்கல் ஊராட்சியில் உள்ள சேங்கல் அரசு மருத்துவமனை அருகே, புதிய பயணியர் நிழல் குடை அமைக்க, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா கரூர் எம்பி ஜோதிமணி தலைமையில் நடைபெற்றது. பயணியர் நிழல் குடை அமைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்று,அதற்கான பணிகளை ஜோதிமணி துவக்கி வைத்தார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களது குறைகள் குறித்து மனுக்களாக எம்பி ஜோதிமணி இடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட ஜோதிமணி, மனுவை பரிசீலித்து, குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என பொதுமக்களுக்கு உறுதி அளித்தார்.
Tags:    

Similar News