காமராஜர் நினைவு இல்லத்தில் எம்பி மாணிக்கம் தாகூர் மரியாதை

விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து எம்பி மாணிக்கம் தாகூர் மரியாதை செலுத்தினார்.

Update: 2024-06-13 11:28 GMT

மரியாதை செய்த மாணிக்கம் தாக்கூர்

விருதுநகர் விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தெரிவித்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர்,

தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை என்பது சிறு பிள்ளைகள் விளையாடும் கிரிக்கெட் அல்ல, அழுது கொண்டு மீண்டும் பேட்டிங் கொடுங்கள் என கேட்பது போல் விஜயபிரபாகரனின் செயல் உள்ளது தேர்தல் ஆணையத்தின் நேர்மையான அதிகாரிகளால் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு அறிவிக்கப்பட்ட பின்னர் வீட்டில் சென்று தனது அம்மாவை அழைத்துக் கொண்டு முதலில்,

இருந்து விளையாட வேண்டும் என சொல்வதற்கு இது கிரிக்கெட் விளையாட்டு அல்ல பொய்யாக, விளையாட்டுத்தனமான, விளம்பரத்திற்காக செய்யும் இவர்களது செயலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாது மறு எண்ணிக்கை கோரிய மனுவை தேர்தல் ஆணைய கிளர்க்தான் பெற்றிருப்பார்,

புகார் மனுவை 3 தேர்தல் அணையர்களும் இந்த மனுவை பார்த்திருக்க கூட மாட்டார்கள் மீண்டும் மீண்டும் போய் பிரச்சாரம் செய்வதை தேமுதிக நிறுத்திக் கொள்ள வேண்டும் மைனாரிட்டி அரசாக பாஜக அரசு உள்ளது பீகார்,

டெல்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநில தேர்தலில் பாஜக தோல்வியடையும் அதன் பின்னர் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் பீகார் மாநில தேர்தலுக்கு பின்னர் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும்

Tags:    

Similar News