திருப்பூர் :மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

மாநகர நகர் நல அலுவலர் தினந்தோறும் ரோந்து பணி மேற்கொண்டு மாநகராட்சி ஆணையாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநகராட்சி மேயர் உத்தரவிட்டார்.

Update: 2023-12-01 03:43 GMT

மேயர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது. தொற்று நோய்களை தடுக்கும் வகையில் நகர் நல அலுவலர் ரோந்து பணிகளை தீவிர படுத்த கவுன்சிலர்கள் கோரிக்கை. திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர், துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். மாமன்ற உறுப்பினர்கள் அந்தந்த வார்டு பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் சோடியம் மின் விளக்குகள் எரியாமல் இருப்பதாகவும்,  பழுதடைந்த சோடியம் மின் வழக்கங்களை மாற்றி தர வேண்டும் எனவும் விளக்குகளை பராமரிக்கும் பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். 

இதனைத் தொடர்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கி டெங்கு , மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவக்கூடிய சூழலில் மாநகர நகர் நல அலுவலர் கௌரி சரவணன் ரோந்து மேற்கொண்டு அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதில்லை என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களும் , திமுக கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர்களும் குற்றம் சாட்டினர். மாநகர நகர அலுவலர் பணி தற்போதுள்ள மழைச் சூழலில் திருப்திகரமாக இல்லை என மாநகராட்சி மேயரும் அதிர்ப்தி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாநகர நகர் நல அலுவலர் தினந்தோறும் ரோந்து பணி மேற்கொண்டு மாநகராட்சி ஆணையாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநகராட்சி மேயர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News