பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் ஆசிரியை கொலை வழக்கு - சம்பவம் குறித்து மாவட்ட SP தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் ஆசிரியை கொலை வழக்கு சம்பவம் குறித்து மாவட்ட SP தகவல்;

Update: 2024-02-12 06:00 GMT

மாவட்ட SP தகவல்

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி பிப்ரவரி 11ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்த போது 2023 நவம்பர் 15ஆம் தேதி அரசு பள்ளி ஆசிரியர் தீபா, வெங்கடேசன் ஆகிய இருவரையும் காணவில்லை என்ற புகாரை தொடர்ந்து விசாரணையை செய்த காவல்துறையினர், தலைமைறைவாக இருந்த ஆசரியர் வெங்கடேசனை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தேடிவந்தனர். இந்நிலையில் தனிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி ஆசிரியர் வெங்கடேசன் சென்னையில் இருப்பது தெரியவந்தது. தகவல் கிடைக்கப்பெற்ற உடனே விரைந்து சென்ற தனிப்படையினர் ஆசிரியர் வெங்கடேசனை சென்னையில் வைத்து கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் பல தகவல்கள் தெரியவந்தது. ஆசிரியர் வெங்கடேசன் ஆன்லைன் டிரேடிங் நடத்தி பல்வேறு நபர்களிடமிருந்து பல லட்ச ரூபாய் பணத்தைப் வாங்கி உள்ளதாகவும், மேலும் ஆசிரியர் தீபாவிடம் பல லட்சம் பணம் கொடுக்கல் வாங்கல் வைத்திருந்ததாகவும் இந்நிலையில் ஆசிரியை தீபாவை ஏமாற்றி தீபாவின் காருடன் பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடி மற்றும் நமையூர் வனப்பகுதியில் வைத்து சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு தீபாவின் உடலை தீபாவின் காரிலேயே ஏற்றிச்சென்று புதுக்கோட்டை அருகில் காட்டு பகுதியில் வைத்து பிரேதத்தை முழுவதுமாக எரித்துவிட்டதாகவும் ஆசிரியர் தீபா அணிந்திருந்த தங்க தாலிச்செயின் மற்றும் அவரது செல்போன் ATM –கார்டு உள்ளிட்ட உடைமைகளையும் தீபாவின் காருடன் எடுத்துச்சென்று பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்துவிட்டு இறுதியில் கோயம்பத்தூர் உக்கடம் மார்க்கெட் பகுதியில் தீபாவின் காரை அங்கேயே விட்டுவிட்டு கேரளா மாநிலம் சென்றும் அதன்பின்னர் சென்னை சென்று தலைமறைவாக இருந்து வந்த்தாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருடன் இணைந்து ஆசிரியை தீபாவின் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் வழக்கின் குற்றவாளியான ஆசிரியர் வெங்கடேசனை வி.களத்தூர் காவல்நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தாகவும் இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர் மங்களமேடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் சீராளன், காவல் ஆய்வாளர் பாலாஜி மற்றும் உதவி ஆய்வாளர்கள் மனோஜ், வினோத்கண்ணன், சங்கர், செந்தமிழ்செல்வி, சரவணக்குமார், சஞ்சீவி, சிவக்குமார், தலைமைக்காவலர் சுரேஷ், கலைமணி, ஆகியோர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
Tags:    

Similar News