இரவு நேர சிறப்பு வழிபாட்டில் இஸ்லாமியர்கள் !

ரம்ஜான் நோன்பை முன்னிட்டு நெல்லையில் இரவு நேர சிறப்பு வழிபாட்டில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.

Update: 2024-03-12 10:07 GMT

இஸ்லாமியர்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் இன்று முதல் புனித நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று இரவு பாளையங்கோட்டை,சாந்திநகர்,சமாதானபுரம், பர்கிட்மாநகரம், சந்தைப்பேட்டை உள்ளிட்ட பள்ளிவாசல்களில் புனித ரமலான் இரவு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய ஆண்கள்,பெண்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News