கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய மர்ம நபர்கள்

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2024-01-02 14:27 GMT

கோப்பு படம் 

கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி முருகன் நகர் பகுதியில் வசித்து வருவார் ராஜேந்திரன்.போஸ்ட்மேன் ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் கடந்த 31 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஈரோட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மறுநாள் அவரது வீட்டின் அருகில் வசிப்பவர் ராஜேந்திரனை அழைத்து வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கோவைக்கு திரும்பியவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க வளையல்,மோதிரம் மற்றும் கம்மல்கள் திருட போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்,

இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பீரோவில் இருந்த கைரேகைகளை வைத்து இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News