திருவெள்ளறையில் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை கட்டையன் பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2024-04-04 10:59 GMT

கோப்பு படம் 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மேல சீதேவிமங்கலம் தெற்கு நடுத்தெரு காலனியைச் சேர்ந்தவர் 38 வயதான அன்புசெல்வம்.இவர் திருச்சி துறையூர் சாலையில் தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திருவெள்ளறை கட்டையன் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பெட்ரோல் இல்லாததால் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள தனது நண்பரிடம் பெட்ரோல் வாங்குவதற்காக சென்று உள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக் மாயமாகியிருந்தது.

மர்ம நபர்கள் மோட்டார் பைக்கை திருடிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பு செல்வம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் நேற்று இரவு வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News