மாணவி மரணத்தில் மர்மம் - தேசிய ஆதி திராவிட ஆணைய குழு விசாரணை

Update: 2023-12-07 03:49 GMT

விசாரணை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே கோவானூா் பகுதியைச் சேர்ந்தவர் மருதுலெட்சுமி (19). இவா், காளையாா் கோவில் தனியாா் செவிலியா் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயிற்சிக்காக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை சென்றிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்த நிலையில் தேசிய ஆதிதிராவிடா் ஆணைய இயக்குநா் ரவிவா்மன் தலைமையிலான குழுவினா் காளையார் கோவில் சென்று விசாரணை நடத்தினர்.



Tags:    

Similar News