சங்கரன்கோவிலில் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நாம் தமிழர் கட்சி

தென்காசி பாராளுமன்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இசை. மதிவாணன் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மைக் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

Update: 2024-04-16 03:58 GMT
சங்கரன்கோவிலில் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் நாம் தமிழர் கட்சி

தென்காசி பாராளுமன்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இசை. மதிவாணன் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியம்பட்டி, இளவன்குளம், கலப்பாகுளம், அழகாபுரி, கரிசல்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மைக் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

அப்போது பேசிய அவர் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்டவ கட்சிகள் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவார்கள் என்றும், நாம் தமிழராய் ஒன்றிணைந்தால் பெரிய வெற்றி கிடைக்கும் என்றும் அந்த வெற்றிக்காக தான் நாம் தமிழர் கட்சி சீமான் 14 ஆண்டுகளாக போராடி கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர் தென்காசி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி எனவும் மதிவாணன் பேசினார்.

Tags:    

Similar News