நாகர்கோவில் மசாஜ் சென்டர் பிசியோதெரபிஸ்ட் கைது

மசாஜ் சென்டரில் சிகிச்சைக்கு வந்த பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த பிசியோதெரபிஸ்ட் கைது செய்யப்பட்டான்.

Update: 2024-05-04 04:44 GMT

மசாஜ் சென்டரில் சிகிச்சைக்கு வந்த பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த பிசியோதெரபிஸ்ட் கைது செய்யப்பட்டான்.


குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் ஆயுர்வேத மற்றும் சித்தா சிகிச்சை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிட்சைக்கு வந்த பெண்ணை அறையில் உள்ள வெண்டிலேட்டர் வழியாக செல்போன் காமிரா மூலமாக வீடியோ பதிவு செய்ததாக புகார் எழுந்தது.        இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் வடசேரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் அந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.  அப்போது அவர் மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.         இதையடுத்து அவரது 2 செல்போன்கள் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஆய்வு செய்தனர்.  மசாஜ் சென்டரில் சிகிட்சைக்கு வந்த பெண்களை ரகசியமாக வீடியோ பிடித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News