மருமகனால் தாக்கப்பட்ட தொழிலாளி உயிரிழப்பு - மகளுக்கு போலீஸ் வலை 

நாகர்கோவிலில் மருமகன் தாக்கியதில் மாமனார் உயிரிழந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-03-26 06:53 GMT

பைல் படம் 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பாறையடி பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் (65) கட்டிடத் தொழிலாளியான இவருடைய மனைவி பிரேமலதா. இவர்களுடைய மகள் சுபிதா ஷாலி (29) .இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குளச்சல் பகுதியை சேர்ந்த ஜோ என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.  தற்போது  சுபிதா ஷாலி  பிரசவத்திற்காக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.     

 இந்த நிலையில் கடந்த வாரம் ஜோ தனது மனைவி சுபிதா சாலியை பார்க்க தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ஜோ வுக்கும், மாமனார் சகாதேவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ஜோ, மாமனாரை மாமியாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.      இதில் படுகாயம் அடைந்த சகாதேவன் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து மருமகன் ஜோ மற்றும் மகள் சுபிதா ஷாலி ஆகியோர் மீது பிரேமலதா வடசேரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜோவை ஏற்கனவே கைது செய்தனர்.போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜோவை கைது செய்தனர். இதற்கு இடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சகாதேவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதை அடுத்து இந்த வழக்கு கொலை வழக்கமாக மாற்றப்பட்டு, தலைமறைவான மகள் சுபிதா ஷாலியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News