நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

பெரம்பலூர் மக்களவை தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Update: 2024-03-26 04:17 GMT
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில், வேட்பாளர் தேன்மொழி தனது வேட்பு மனவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கற்பகத்திடம், மார்ச் - 25ம் தேதி மனு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேன்மொழி கூறுகையில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், வெற்றி பெற்ற பிறகு பொது மக்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும், தேவைகளும் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதோடு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News