சிறப்பு ராஜ அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயிலில் மார்ச் 26ல் திருத்தேரோட்டமும், அரங்கநாதர், ஆஞ்சநேயர் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

Update: 2024-03-20 16:04 GMT

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி நிகழாண்டு பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. தினந்தோறும் இரவு 8 மணியளவில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

மார்ச் 26–ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நரசிம்மர் கோயில் திருத்தேரோட்டமும், மாலை 4.30 மணியளவில் அரங்கநாதர், ஆஞ்சநேயர் தேரோட்டமும் நடைபெற உள்ளது.அதன் படி இன்று (மார்ச்-20) இரவு சுவாமி அனுமந்த வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. அதை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பச்சை பட்டாடை சாற்றி சிறப்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News