வணிக வளாக கட்டுமான பணி தொடக்கம் - எம்.எல்.ஏ. ஈஸ்வரன் பங்கேற்பு..!

திருச்செங்கோட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் புதிதாக கட்டப்பட உள்ள வணிக வளாக கட்டிடத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

Update: 2023-10-19 11:00 GMT

கட்டிடம் கட்டுமான பூஜை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, திருச்செங்கோடு ஒன்றியம், விட்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் புதிதாக கட்டப்பட உள்ள வணிக வளாக கட்டிடத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொ.ம.தே.க பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல், KMDK நாமக்கல் மேற்கு மாவட்ட கொள்கைபரப்புச் செயலாளர் நந்தகுமார், திருச்செங்கோடு கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபால், திருச்செங்கோடு ஒன்றிய குழு துணைத் தலைவர் ராஜபாண்டி, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜெகநாதன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க CSR உள்ளிட்ட சங்க பணியாளர்கள், திமுக பொறுப்பாளர் கணபதி மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.
Tags:    

Similar News