கணபதிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கல்

கணபதிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2023-12-19 15:20 GMT

தரச் சான்றிதழ் 

மொடக்குறிச்சி அருகேயுள்ள கணபதிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் தேசிய தர மதிப்பீட்டு குழுவினரால் கடந்த நவம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தேசிய தர மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் கணபதிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் 96.4% விழுக்காடு பெற்றுள்ளது. தமிழ்நாடு அளவில் முதல் முறையாக அதிக மதிப்பெண் பெற்று முதல் இடம் என்ற பெருமையை கணபதிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் பெற்றுள்ளது. இதனையடுத்து தேசிய தர மதீப்பிட்டு குழுவினரால் தேசிய தரச் சான்றிதழ் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News