நெல்லையில் முதல் முறையாக ஏற்றப்பட்ட தேசிய கொடி

குடியரசு தினத்தை முன்னிட்டு நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியில் முதல் முறையாக தேசிய கொடி ஏற்றப்பட்டது.

Update: 2024-01-26 03:37 GMT

சட்டை பைகளில் தேசிய கொடி குத்திக்கொண்ட குழந்தைகள் 

நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று  வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த குடியரசு தின விழாவினை முன்னிட்டு இன்று முதல் முறையாக பேட்டை நரிக்குறவர் காலணியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. முதல் முறையாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் நரிக்குறவர் இன சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தேசிய கொடியை தங்களது சட்டை பைகளில் குத்திக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Tags:    

Similar News