தேசிய பெண் குழந்தைகள் தின நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் நடைபெற்ற தேசிய பெண் குழந்தைகள் தின கையெழுத்து உறுதிமொழி நிகழ்ச்சியில் அமைச்சர் டிஆர்பி ராஜா துவக்கி வைத்தார்.

Update: 2024-01-27 05:28 GMT

உறுதிமொழி 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கையெழுத்து உறுதிமொழி நிகழ்ச்சியினை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தொடங்கி வைத்தார் . அப்போது மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ,மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News