தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் விசாரணை

கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-27 04:52 GMT

கிஷோர் மக்வானா ஆய்வு 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் நடந்த சம்பவம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா நேற்று  கருணாபுரத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்கள். உடன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர்கள் வட்டேபள்ளி ராம்சந்தர், லவ்குஷ்குமார், இயக்குநர் இயக்குநர் ரவிவர்மன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் க.லட்சுமி பிரியா ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் த.ஆனந்த் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் இருந்தனர்.
Tags:    

Similar News