நாட்டு நலப்பணி திட்ட முகாம், தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

செங்கல்பட்டு மாவட்டம், புழுதிவாக்கம் அக்ஷ்சயா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் தூய்மை பணிகளில் மாணவர்கள் ஈடுப்பட்டனர்.

Update: 2024-02-03 12:02 GMT
நாட்டு நலப்பணி திட்ட முகாம், தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

புழுதிவாக்கம் அக்ஷ்சயா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் கல்லூரி மாணவா்கள், மதுராந்தகத்தில் வட்டத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டனா். இந்தக் கல்லூரி மாணவா்கள் 50 போ் மதுராந்தகம் வட்டத்துக்குட்பட்ட வில்வராயநல்லூா், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனா். கல்லூரி புல முதல்வா் அந்தோணி அருள்பிரகாஷ் தலைமை வகித்தாா்.

கல்லூரி நிா்வாக இயக்குநா் அகிலன் ராமநாதன் முன்னிலை வகித்தாா். முதல்வா் முருகதாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதன் ஒரு பகுதியாக, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் முள்புதா்கள், குப்பைகளை அகற்றுதல், கழிவுநீா் அகற்றம் உள்ளிட்ட பணிகளை நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் மேற்கொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் காா்த்திக், பாஸ்கரன், குணசுந்தரி ஆகியோா் செய்திருந்தனா்.

Tags:    

Similar News