கோடை வெப்பத்தை தணிக்க நீர் மோர் பந்தல் திறப்பு

ஆரணியில் பாஜக சார்பில் கோடை வெப்பத்தை தணிக்க நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2024-05-09 13:13 GMT

நீர்மோர் பந்தல் 

திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணி சட்டமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி மத்திய நல திட்ட பிரிவு சார்பாக ,ஆரணி அண்ணா சிலை முன்பு கோடை வெப்பத்தை தணிக்க இன்று நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் மத்திய நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சைதை வ. சங்கர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மோர், இளநீர் மற்றும் பழங்களை வழங்கினார் .
Tags:    

Similar News