முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மறைவிற்கு நெல்லை முபாரக் இரங்கல்
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மறைவிற்கு நெல்லை முபாரக் இரங்கல் தெரிவித்துள்ளார்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-09 09:52 GMT
தென்னிந்திய கல்வி அறக்கட்டளையின் தலைவரும் காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் புரவலரும் ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான மூஸா ராஜா இன்று மரணம் அடைந்தார்.
அவரின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மே 9) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உறவினர்களுக்கு ஆழ்ந்த ஆறுதலையும் அனுதாபங்களையும் தெரிவிப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.