உருட்டு கட்டையால் மகளை தாக்கிய தந்தைக்கு வலை

வீரராகவபுரத்தை சேர்ந்த ஹரிணியை, அவரின் தந்தை உருட்டு கட்டையால் தாக்கியதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் போலீஸ் விசாரணை நடக்கிறது.

Update: 2024-03-28 04:46 GMT

பைல் படம் 

திருவாலங்காடு ஒன்றியம், வீரராகவபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மாதாக்கோவில் தெருவை சேர்ந்தவர் ரவணைய்யா, 42. இவரது மகள் ஹரிணி, 16. இவர் திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். 23ம் தேதி தேர்வு எழுதி விட்டு மதியம் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது தந்தை படிக்காமல் என்ன செய்கிறாய் என கேட்டு, உருட்டு கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்தவர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்படி திருவாலங்காடு போலீசார் ரவணைய்யாவை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News