புத்தாண்டு... கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை

கோவையில் புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Update: 2023-12-27 10:01 GMT

 கோவையில் புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். 

கோவை:மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது வரும் 2024 ஆம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான நெறிமுறை மற்றும் வழிகாட்டுதல் குறித்து பேசினார்.மேலும் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு மாநகர பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளும் போலீசாருடைய பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். முன்னதாக புத்தாண்டு பண்டிகைக்கு நட்சத்திர விடுதிகளில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கான வரைமுறைகள் குறித்து ஹோட்டல் பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நள்ளிரவு ஒரு மணியுடன் அனைத்து கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு விடுதிகள் மூடப்பட வேண்டும் எனவும் போதை பொருட்கள் போன்றவை விற்பனையோ பயன்படுத்தவோ அனுமதிக்க கூடாது எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.இந்த கூட்டத்திற்கு மாநகர பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர்கள் வந்திருந்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு 2 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடுவார்கள் என்றும் கோவில், சர்ச், பள்ளிவாசல் போன்ற தளங்களில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்.மதுபோதையில் வாகனம் ஒட்டுபவர்களை தடுக்க தடுப்புகள் வைத்து போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக கூறியவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.மாநகர பகுதிகளில் கூடுதல் செக்போஸ்ட்கள் அமைக்கப்படும் எனவும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைப்பெறும் அரங்குகளுக்கு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியவர்போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.மகிழ்ச்சியான நாளாக புத்தாண்டை கொண்டாட காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கோவையில் உள்ள மேம்பாலங்கள் அடைக்கபடும் எனவும் அவசர தேவைக்காக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றவர் ரோந்து காவலர்கள் அதிகளவில் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.மக்களுடன் புத்தாண்டு கொண்டாட வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் புத்தாண்டு கொண்டாடுவோம் எனவும் பாதுகாப்பு அளிப்பது தான் பிரதான பணி என்றவர் விபத்து இல்லாத புத்தாண்டுகளாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News