தற்கொலை
ஈரோட்டில் பரிதாபம் மகன் இறந்த துக்கத்தில் தாய் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை;
ஈரோடு கருங்கல்பாளையம், கமலா நகரை சேர்ந்தவர் மாதையன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி அமுலு (42). இவர்களுக்கு இரண்டு மகள்களும், செல்லத்துரை என்ற மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். இளைய மகள் பாலக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். செல்லதுரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தார். இந்நிலையில் கலந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி செல்லதுரை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதிலிருந்து அமுலு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும் அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்தார்.இந்நிலையில் நேற்று காலை மாதையன் பூந்துறைக்கு கட்டிட வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்த அமுலு திடீரென தூக்கு போட்டு கொண்டார். அருகில் இருந்த அவரது உறவினர்கள் அமுலு வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவர் தூக்கு போட்டு தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து நடந்த சம்பவம் குறித்து மாதயனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். மாதையன் பதறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அமுலுவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே அமுலு இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் மகன் இறந்த துக்கத்தில் அம்முலு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.