
ஈரோடு, தாலுகா காவல் எல்லைக்குட்பட்ட கதிரம்பட்டி – நசியனூர் வழியில் உள்ள ஓடக்கரை பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்டு வருவதாக தாலுகா போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று கண்காணித்த போது ஒரு கும்பல் சேவல் சண்டையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.விசாரணையில், அவர்கள் திண்டல், கே.எம்.எஸ். நகரை சேர்ந்த மோகன்குமார் (37), வேப்பம்பாளையம், தெற்கு அருந்ததியர் காலனியை சேர்ந்த சக்திவேல் (34), கருங்கல்பாளையம், வினாயகர் கோயில் வீதியை சேர்ந்த அருண் (25) என்பது தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 2 சேவல்கள், கத்திகள் மற்றும் பந்தய பணம் ரூ. 3,200 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.