
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதனடிப்படையில், கோபி மதுவிலக்குப் பிரிவு போலீசாரும், கடம்பூர் போலீசாரும் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த சத்தியமங்கலம், நேரு நகரை சேர்ந்த குணசேகரன் (29), கடம்பூர், பசுவனாபுரத்தை சேர்ந்த கவுண்டப்பன் (67) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து 52 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.