கிண்ணக்கொரை கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது..!

கிண்ணக்கொரை கிராம கூட்டுக் குடிநீர் திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-24 18:51 GMT

நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களுள் ஒன்றான கிண்ணக்கொரை கிராமத்தின் பல ஆண்டு கோரிக்கையான கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்த திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். ரூ.5.45 கோடி மதிப்பீட்டில் மாநில அரசின் குறைந்தபட்ச தேவை திட்டத்தின் கீழ் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் நிதியின் மூலம் மேல் குந்தா ஊராட்சிக்கு உட்பட்ட கடைக்கோடி கிராமமான கிண்ணக்கொரை கிராமத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். 

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் திட்டத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். நீலகிரி மாவட்டம் ஊட்டி ஒன்றியம், மேல் குந்தா ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்பது குடியிருப்புகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் வராகப்பள்ளம் நீரோடையை நீர் ஆதாரமாகக் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து வராகப்பள்ளம் நீரோடையின் குறுக்கே தடுப்பணை அமைத்து அதில் இருந்து 18 மீட்டர் நீளம் 80 மில்லி மீட்டர் விட்டம் உள்ள ஜீ.ஐ., தண்ணோட்ட குழாய் மூலமாக 6750 லிட்டர் கொள்ளளவு உள்ள நீர் சேகரிப்பு தொட்டியில் சேகரித்து பின்பு திறந்தவெளி மின்மோட்டார் மூலமாக நீர் உறிஞ்சப்பட்டு 11,360 மீட்டர் நீளம் 100 மில்லி மீட்டர் விட்டம் உள்ள டி.ஐ., குழாய் மூலம் தாணிக்கண்டி அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது ரூ.5.45 கோடி மதிப்பீட்டலான அந்தப் பணிகள் முடிக்கப்பட்டு இன்று மக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக இன்று திறந்து வைத்தார். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான கிண்ணக்கொரை கிராமத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார்.

Tags:    

Similar News