வட மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வடசேரியில் வட மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-27 03:49 GMT
பைல் படம்

அசாம் மாநிலம் தோணியூர் பகுதியை  சேர்ந்தவர் சுலைமான் (24). இவர் குமரி மாவட்டம் , நாகர்கோவில் அருகே ஒழுகினசேரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இதே ஓட்டலில் வேலைக்கு அதே பகுதியை சேர்ந்த ஷியாம் லால்  சோபூர் (51) என்பவர் கடந்த 22 ஆம் தேதி நாகர்கோவில் வந்தார்.        பின்னர் சுலைமான் தங்கி இருக்கும் வடசேரி பராசக்தி கார்டன் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். 

நேற்று வேலை முடிந்து சுலைமான் சென்று பார்க்கும் போது, ஷியாம்லால்  சோபூர் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இது குறித்து சுலைமான் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சியாம்லால் சோபூர் தற்கொலைக்கான  காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News