புதன்சந்தை பகுதியில் நாளை (7 ம் தேதி) மின் நிறுத்தம் அறிவிப்பு

புதன்சந்தை பகுதியில் நாளை (7 ம் தேதி) மின் நிறுத்தம் அறிவிப்பு

Update: 2023-12-06 16:33 GMT

புதன்சந்தை பகுதியில் நாளை (7 ம் தேதி) மின் நிறுத்தம் அறிவிப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…


நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பகுதியில் நாளை 7 ஆம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் பகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் வழங்கிட, ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை பகுதியில், நாளை 7 ஆம் தேதி வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி, புதன்சந்தை துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி வரை மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாதிரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொளிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, பாளையம், களங்காணி, காரைக்குறிச்சி உள்ளிட்ட, புதன்சந்தை துணை மின் நிலையத்தில் இருந்து, மின்சார வசதி பெறும் பகுதிகளில், நாளை 7 ஆம் தேதி வியாழக்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News