அஞ்சல் வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

தர்மபுரி கோட்ட அளவிலான அஞ்சல் வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 27ம் தேதி கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது.

Update: 2024-06-14 09:33 GMT

தர்மபுரி 

தர்மபுரி அஞ்சல் கோட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், தர்மபுரி கோட்டம், தர்மபுரி - 636701 என்ற முகவரிக்கு அனுப்பலாம். தங்கள் புகார்கள் வரும் 21ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல்துறையின் மணி ஆர்டர், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு செய்யப்பட்ட தபால் போன்ற சேவை தொடர்பான புகார் இருப்பின் அது தொடர் பான பதிவு எண், பதிவு செய்யப்பட்ட தேதி மற் றும் அலுவலகம் போன்ற முழு விவரங்கள் இருக்க வேண்டும். அஞ்சல் துறையின் சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவை தொடர்பான புகார் இருந்தால், அது தொடர் பான முழு கணக்கு எண், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி எண்கள், வைப்பாளர், காப்பீட் டாளரின் பெயர் மற்றும் முகவரி, தபால் அலுவல கத்தின் பெயர் போன்ற குறிப்புகள் இருக்க வேண்டும்.முழு விவரங்கள் அடங்கிய புகாரை அனுப் பும் அஞ்சல் உறையின் மீது 'தாக் அதாலக் கேஸ்' என்று குறிப்பிட வேண் டும். இத்தகவலை தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News