மரத்தில் தூக்கில் தொங்கி இறந்த ஒடிசா தொழிலாளி

தக்கலையில்  ஒடிசா மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Update: 2024-02-15 06:43 GMT

மரத்தில் தூக்கில் தொங்கி இறந்த ஒடிசா தொழிலாளி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஒரு போர்வெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் ஒடிசா மாநிலம் நவரங்பூர் மாவட்டம் குர்ஜா தாலுகா பகுதியை சேர்ந்த ரமேஷ் கண்டா (29) என்பவர்  பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தக்கலை அடுத்த கள்ளகுறிச்சி பகுதியில் பட்டாணி குளம் அருகே போர் போடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதில் ரமேஷ் கண்டாவும் பணியில் இருந்தார். இரவில்  பணியாளர்கள்  அனைவரும் உணவு உண்டு விட்டு பார்க்கும் போது அங்கு ரமேஷ் கண்டா காணப்படவில்லை. உடனே  அருகில் உள்ள பகுதியில் தேடிய போது அங்குள்ள தோட்டம் ஒன்றில் பலாமரத்தில் தூக்கில் தொடங்கிய நிலையில் அவர் காணப்பட்டார்.       உடனடியாக அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News