புகையிலை பொருட்கள் பறிமுதல்!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே அதிகாரிகள் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-04-19 09:24 GMT

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் 

பொன்னமராவதி பேரூராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகலிங்கம் தலைமையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக சுகாதார ஆய்வாளர் (பொ) உத்தமன், சுகாதார ஆய்வாளர்கள் ராமலிங்கம், முகேஷ்கண்ணா, வசந்த், கண்ணன், பிரேம்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News